Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்களை மீட்க வலியுறுத்தி நாகை பெண்கள் கடலில் இறங்கியதால் பரபரப்பு

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (10:07 IST)
சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக தமிழக மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் கடலில் காணாமல் போனதை அடுத்து இந்திய ராணுவத்தின் துணையுடன் அவர்களை மீட்க வேண்டும் என்று மீனவர்கள் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
 
மீனவர்களை மீட்கும் பணி ஓரளவுக்கு நடைபெற்று வந்தாலும் ஆர்.கே.நகர் தேர்தலில் மாநில அரசும், குஜராத் தேர்தலில் மத்திய அரசும் கவனம் செலுத்தி வருவதால் மீனவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறவில்லை என்று மீனவர்களின் குடும்பத்தினர் குற்றச்சாட்டி வருகின்றனர்
 
இந்த நிலையில் இன்று காலை திடீரென நாகையில் உள்ள மீனவ குடும்பத்து பெண்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்துவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்களை கண்டுபிடிக்கும் பணியில் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments