Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் பத்தாம் வகுப்பு மாணவி பலியான பரிதாபம்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (08:59 IST)
காஞ்சிபுரத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி சரிகா சிறுநீரக நோயால் அவதிப்பட்டிருந்த நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரது சிறுநீரகம் முற்றிலும்  பழுதானதால் உடனடியாக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் மாணவியின் பெற்றோர் காஞ்சிபுரம் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் உதவியை நாடினர்

ஆனால் எத்தனை மணிக்கு ஆம்புலன்ஸ் வரும் என்ற பதிலை 108 நிர்வாகம் முறையாக தரவில்லை. இதனால் மாணவியை சென்னைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக மாணவியை சென்னை கொண்டு செல்ல 7 மணி நேரம் தாமதம் ஆனதால் மாணவி சரிகா பரிதாபமாக உயிரிழ்ந்தார்.

மாணவி சரிகாவின் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம், ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் கிடைத்திருந்தால் சரிகாவின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் மாணவியின் பெற்றோர் புகார் கூறினர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என - காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ இணை இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments