அதிகம் கொடுத்தால் ஆளுங்கட்சி: குறைத்து கொடுத்தால் எதிர்கட்சி – மனம்நொந்த சீமான்

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (13:40 IST)
வேலூர் தேர்தல் முடிவுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் தேர்தல் குறித்த தனது கருத்துகளை கூறியுள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து முன்னிலையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த தேர்தலில் அதிமுக, திமுக தவிர மற்ற முக்கிய கட்சிகள் எதுவும் போட்டியிடாத நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் போட்டியிட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 24,818 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சீமான் “அதிகம் பணம் கொடுத்தால் ஆளும்கட்சி, குறைந்த பணம் கொடுத்தால் எதிர்க்கட்சி என்ற நிலைதான் தமிழகத்தில் நீடித்து வருகிறது. பணம் வாங்காமல் ஓட்டு போடும் நிலை வந்தால் மக்கள் நிச்சயம் நாம் தமிழருக்கு ஓட்டு போடுவார்கள். பணத்திற்காக ஓட்டை விற்கும்வரை எதுவும் மாறாது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments