Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (12:36 IST)
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளுக்கான அதிமுக, திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 50% பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தது போலவே இந்த நான்கு தொகுதிகளில் இரண்டு தொகுதியில் பெண் வேட்பாளரை சீமான் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் நான்கு வேட்பாளர்கள் குறித்த விபரம் பின்வருமாறு:
 
திருப்பரங்குன்றம் - ரா.ரேவதி
 
ஒட்டப்பிடாரம் - மு. அகல்யா 
 
சூலூர் - வெ.விஜயராகவன் 
 
அரவக்குறிச்சி - பா.க.செல்வம்
 
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மேலே உள்ள நால்வரும் இன்று அல்லது நாளை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments