Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எடப்பாடி பழனிசாமி உடன் மைத்ரேயன் சந்திப்பு.. மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா?

mythreyan

Mahendran

, வியாழன், 12 செப்டம்பர் 2024 (11:45 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக பிரமுகர் மைத்ரேயன் சந்தித்துள்ளதாக கூறப்படும் நிலையில் மீண்டும் அவர் அதிமுகவில் இணையப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்த மைத்ரேயனை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2022 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கினார். இதனை அடுத்து மைத்ரேயன் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் கசிந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு பாஜகவில் பெரும் எதிர்பார்ப்புடன் மைத்ரேயன் இணைந்த நிலையில் அவருக்கு அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை மைத்ரேயன் சந்தித்துள்ளதாகவும் மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து பேட்டி அளித்த மைத்ரேயன் எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வினேஷ் போகத்தை எதிர்த்து WWE வீராங்கனை.. ஆம் ஆத்மி அதிரடி அறிவிப்பு..!