Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் ஆவி போலீஸாரை சும்மா விடாது…. ஆடியோவின் பேசிய சாமியார் தற்கொலை

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (22:52 IST)
நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் அருகிலுள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த சரவணன்.  இவர் சிவனடியாகராக ஊரில் இருந்துள்ளார்.

அதேசமயம் ஊரில் சாமியாராக பூஜைகளும் செய்து வந்துள்ளதாகவும், பேய்களை ஓட்டுதல் போன்ற வேலைகளைச் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் போலீஸார் சரவனைத் தேடி வந்துள்ளனர். அப்போது போலீஸார் அவரை அடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சரவணன் ஒரு ஆடியோ பதிவிட்டு, அதில் என்னைத் தாக்கிய அந்தோணி மைக்கெலை என் ஆவி சும்மா விடாது என்றும் போலீஸார் என்னைத் தாக்கியாதாலேயே நான் தற்கொலை செய்கிறேன் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவரது குடும்பத்தினரும், ஊராரும் அவரைத் தேடியுள்ளனர், பின்னர் ஒரு காட்டுப்பகுதியில் அவர் விஷம் அருந்தித் தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தூத்துக்குடி சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் இருவர் உயிரிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments