Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளும் கட்சியினரால் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு எனது கண்டனங்கள்- எடப்பாடி பழனிசாமி

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (19:11 IST)
ஆளும் கட்சியினரால் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனங்கள் என முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 ஆண்டுகளாக புதர் மண்டி , குளம் இருக்கும் இடமே தெரியாமல் இருந்த கோதவாடி குளம் அம்மாவின் அரசால் தூர்வாரப்பட்டதன் பயனாக, நேற்று இரவு அக்குளம் நிரம்பியதைத் தொடர்ந்து,அவ்வூரை சேர்ந்த பெண்கள் வருண பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, குளக்கரையில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுகிற, பொங்கல் வைத்து வழிபட்ட பெண்களை ஆபாசமாகப் பேசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் பட்டப் பகலில், காவல் துறையினரின் முன்னிலையிலேயே தி.மு.க. குண்டர்களால் தாக்கப்படுகிறார் என்றால், சாதாரண,சாமானிய மக்களின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை, சட்டவிரோத செயல்களைத் தடுத்து நிறுத்த, சட்டரீதியான நடவடிக்கைகளை அஇஅதிமுக முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்,ஆளும் கட்சியினரால் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments