Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க ஓட்டு போடலைனா ஜெயிக்க முடியுமா? – செல்லூராரோடு வாக்குவாதம் செய்த பெண்!

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (11:22 IST)
விருதுநகரில் நடைபெற்ற பெட்ரோல் விற்பனை நிலைய தொடக்க விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூவை பெண் ஒருவர் மேடையில் வைத்து கேள்வி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் கூட்டுறவு துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விற்பனை நிலையத்தை திறந்து வைத்த பிறகு அங்குள்ள மக்களுக்கு மேடையில் வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது நலத்திட்ட உதவிகளை பெற வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் ”சிஏஏவுக்கு ஏன் ஆதரவு அளித்தீர்கள்? இங்குள்ள இஸ்லாமியர்கள் ஓட்டு போட்டிருக்கா விட்டால் உங்களால் வெற்றி பெற்றிருக்க முடியுமா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அதற்கு அமைச்சர்கள் அதனால் பாதிப்பு எதுவும் இல்லை என்று விளக்கமளிக்க முயன்றுள்ளனர். ஆனால் அந்த பெண் மேடையிலேயே அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியதால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments