Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகபக்தர்களை வாக்களிக்க அனுமதிக்காமல் வெளியேற்றிய போலீசார்! சூலூரில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 19 மே 2019 (08:26 IST)
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகின்றது. பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் சூலூர் தொகுதிக்கு உள்பட்ட ஜல்லிப்பட்டி  என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பச்சை, காவி நிறத்தில் உடை அணிந்துள்ள முருக பக்தர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. முருகன் கோவிலுக்கு மாலை போட்டிருப்பதால் பச்சை, காவி வேட்டி கட்டி ஒருசில முருக பக்தர்கள் வாக்களிக்க வந்தனர். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுத்து வாக்குச்சாவடிகளுக்கு வெளியே போலீசார் தள்ளிவிட்டதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
முருக பக்தர்களை வாக்களிக்க அனுமதிக்காததன் காரணத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. வேறு உடை அணிந்து வந்தால் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மட்டும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.  சற்றுமுன் உத்தரபிரதேச முதல் யோகி ஆதித்யநாத் காவி உடையணிந்து வாக்களித்த நிலையில் சூலூரில் மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என முருகபக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments