Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னாள் மேயர் கொலை : திமுக பிரமுகர் கைது ! அரசியலில் பரபரப்பு

முன்னாள் மேயர் கொலை : திமுக பிரமுகர் கைது ! அரசியலில் பரபரப்பு
, புதன், 30 அக்டோபர் 2019 (17:36 IST)
நெல்லை முன்னால் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கடந்த ஜூலை மாதம் வீட்டில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி முக்கிய பேசு பொருளாக ஆனது.இந்நிலையில் இன்று திமுக பிரமுகர் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் 23 ஆம் தேதி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவ்ர் முருக சங்கரன் மற்றும் வீட்டு உதவியாளர் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
 
இக்கொலை சம்பந்தமாக  திமுக பிரமுகரான சீனியம்மாளின் மகன்  கார்த்திக் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்த நிலையில் உமாமகேஸ்வரின் கொலை வழக்கில் இன்று சீனியம்மாள் மற்றும் அவரது கணவர் சன்னாசி ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். இதன் மூலமாக மேலும் பல உண்மைகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகிறது.
 
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாவட்ட ஆட்சியருக்காக கொடுக்கும் மரியாதை முதல்வருக்கு கொடுப்பதில்லை !