Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆண்டுகளாக சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் போக்குவரத்துத் துறை

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (12:43 IST)
சென்னை மாநகர போக்குவரத்துப் பணியாளர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக இ.எல் சம்பளம் தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 
தமிழக போக்குவரத்துக் கழகம் பெட்ரோல் டீசல் விலையுயர்வு நிதி நெருக்கடி போன்ற பல காரணங்களைக் கூறி கடந்த ஆண்டு பஸ் கட்டண உயர்வை அறிவித்தது. இதனால் வருவாய் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் சென்னைப் போக்குவரத்து கழகத்தைப் பொறுத்தவரை வருமானம் பெரிதாக அதிகரிக்கவில்லை. அதனை ஊக்குவிக்க தற்போது பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
 
கடுமையான நிதிநெருக்கடியைக் காரணம் காட்டி போக்குவரத்துத் துறை பணியாளர்களின் பல்வேறு சலுகைகளைப் பறித்து வருகிறது. தொழிலாளர் சட்ட விதிகளின் படி 15 நாட்கள் இ.எல். எனப்படும் ஈடு செய்யப்படும் விடுப்பு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை உபயோகிக்காத தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு நாளுக்கும் அவர்களின் ஒவ்வொரு நாள் சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. 
 
ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக  சென்னை போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு இந்த சம்பளம் அளிக்கப்படாமல் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு..!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு.. காவல்துறை அறிவிப்பு..!

விஜய் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு..!

13 கிமீ தூரத்தை 13 நிமிடங்களில் கடந்த இதயம்.. ஐதராபாத் மெட்ரோ ஒத்துழைப்பு..!

9ஆம் வகுப்பு மாணவியை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சக மாணவர்கள்: கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments