Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை பறிப்பு தண்டனை: எம்பிக்கள் ஆவேச பேச்சு

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (17:45 IST)
தெலுங்கானா மாநிலத்தில் பிரியங்கா ரெட்டி, தமிழ்நாட்டில் ரோஜா உள்பட பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து இன்று நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திமுக எம்பி வில்சன் இதுகுறித்து கூறிய போது, பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை பறிப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். கொரியா, கலிஃபோர்னியா, அமெரிக்கா, அலபாமா போன்ற நாடுகளில் செய்வது போல் பாலியல் வன்கொடுமை குற்றம் புரிபவர்களுக்கு ஆண்மை பறிப்பு செய்ய வேண்டும். அதற்காக ஆகும் செலவை அவர்களின் சொத்துக்களை முடக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
 
சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன் இதுகுறித்து கூறியபோது, ‘பாலியல் குற்றம் புரிந்தவர்களை பொதுவெளியில் நிற்கவைத்து கொல்ல வேண்டும்’ என்று ஆவேசமாக கூறினார்.
 
அதிமுக எம்பி விஜிலா சத்தியானந்த் இதுகுறித்து கூறியபோது, ‘நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பிரியங்கா ரெட்டி குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 பேரையும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தூக்கிலிட வேண்டும். இதற்காக விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும். தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

அடுத்த கட்டுரையில்