Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் இறங்கல.. டாலர்தான் ஒய்யாரம் காட்டுது!? – எம்.பி சு.வெங்கடேசன் கலாய்!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (09:31 IST)
இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் எம்.பி சு.வெங்கடேசன் இதுகுறித்து ட்விட்டரில் பகடி செய்து பதிவிட்டுள்ளார்.

கடந்த சில காலமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை கண்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82க்கும் கீழ் சரிந்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டபோது அவர் “இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்திருப்பதாக நான் கருதவில்லை. டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதாகவே நான் பார்க்கிறேன்” என கூறியுள்ளார். அவரது இந்த பேச்சை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

ALSO READ: “இப்போது இந்தியா எங்களை சாதாராணமாக நினைக்காது…” முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!


இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் “நாங்கள் விழவில்லை பள்ளத்துக்குள் இருக்கிறோம். நாங்கள் பட்டினியாக இல்லை சாப்பிடாமல் இருக்கிறோம். விலை ஏறவில்லை நாங்கள் அதிகமாக கொடுத்து வாங்குகிறோம். ரூபாய் இறங்கவில்லை டாலர்தான் ஏறி ஒய்யாரம் காட்டுகிறது. இவ்வளவையும் புரிந்து கொண்டால் நீங்கள் இந்திய பொருளாதாரத்தின் புலி” என்று பதிவிட்டுள்ளார்.

அதேசமயம் நிர்மலா சீதாராமனுக்கு ஆதரவாக பேசி வரும் பலர் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பது அவற்றின் பரிமாற்றத்தை பொருத்து அமைவதாகவும், மற்ற நாணய மதிப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு உயர்வடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments