நம்ம அப்படியா பழகிருக்கோம்.. இப்படி தப்பா சொல்றீங்களே! – அமெரிக்கா மீது பாக். வருத்தம்!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (09:06 IST)
பாகிஸ்தான் உலகின் ஆபத்தான நாடு என அமெரிக்க ஜனாதிபதி பேசியதற்கு பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில் ஜோ பைடன் அதிபராக பதவி வகிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய அதிபர் ஜோ பைடன், உலகின் ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்றும், ஏனெனில் அந்த நாடு எந்த வித ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்கள் வைத்திருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

ALSO READ: 62.99 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

அமெரிக்க அதிபரின் இந்த பேச்சு பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான கண்டணத்தை பாகிஸ்தானின் அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மனாக அளித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் “அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த கருத்து ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவரது தவறான புரிதலால் இந்த கருத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தூதரிடம் இதுகுறித்து சம்மன் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இது அமெரிக்காவுடனான உறவை பாதிக்காது” என்று கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநரின் குடும்பத்தார் மீது வரதட்சணை, கொலை முயற்சி குற்றச்சாட்டு: மருமகள் பரபரப்பு புகார்!

பதவியேற்ற 9 மாதங்களில் பிரசார் பாரதியின் தலைவர் விலகல்.. என்ன காரணம்?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

அடுத்த கட்டுரையில்
Show comments