சென்னையில் வழக்கம்போல் ஓடும் பேருந்துகள்: என்ன ஆச்சு வேலைநிறுத்தம்?

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (08:44 IST)
புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவில் மோட்டார் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால் சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் ஓடுகின்றன. அதேபோல் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடுவதால் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை.  இருப்பினும் புதுச்சேரியில் ஆட்டோக்கள் ஓடவில்லை என்றும் ஒருசில பேருந்துகள் ஓடவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் நடந்து வரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவிலலை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4,24,317.. தேர்ச்சி பெற்றவ்ர்கள் 1.50 லட்சம்..!

ஆண்டுக்கு ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் பெறுவோர் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.. நிர்மலா சீதாராமன்

ஜோதிடர் சொன்ன ‘வி’ செண்டிமெண்ட்!.. விஜய் போட்டியிடும் தொகுதி அதுவா?!...

பட்ஜெட் 2026: வருமான வரி!.. நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...

இன்று முதல் சிகரெட்டுக்கள் விலை உயர்வு.. ஒரு சிகரெட் 5 ரூபாய்க்கும் மேல் உயர்வா?

அடுத்த கட்டுரையில்
Show comments