Publish Date: Tue, 07 Aug 2018 (08:44 IST)
Updated Date: Tue, 07 Aug 2018 (08:47 IST)
புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவில் மோட்டார் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் ஓடுகின்றன. அதேபோல் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடுவதால் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை. இருப்பினும் புதுச்சேரியில் ஆட்டோக்கள் ஓடவில்லை என்றும் ஒருசில பேருந்துகள் ஓடவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் நடந்து வரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவிலலை என்பது குறிப்பிடத்தக்கது