Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்துக்கு சம்மதிக்காத தாய் : ஆத்திரத்தில் கொலை செய்த வாலிபரால் பரபரப்பு

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (10:07 IST)
சென்னை கிண்டி நரசிங்கபுரம் 4 வது தெருவில் வசித்து வந்தவர் ரேவதி ( 45). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார். எனவே தன் இரு மகள்களுடன் வசித்து வந்தார். அவர் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவரது  மூத்த மகளுக்கும்(20) கிண்டி மசூதி காலனியை சேர்ந்த கார் டிரிவரான வினோத் (27) என்பவருக்கும் கடந்த ஒரு ஒருவருடத்துக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
 
ஆனால் சில காரணங்களால் ரேவதி தன் மகளை வினோத்துக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து வினோத் ரேவதியிடம் அவரது மகளை தனக்கு திருமண செய்தி கொடுக்க சொல்லி வற்புறுத்தி வந்தார்.ஆனால் ரேவதி இதற்கு சம்மதிக்கவில்லை.
 
இவரது தொந்தரவால் தன் மகளை உறவினர்  வீட்டுக்கு அனுப்பி வைத்தார் ரேவதி. 
ரேவதியின் மகளைக் காணாமல் வினோத் தவித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வேலைமுடித்து வீட்டுக்கு திரும்பிய ரேவதியை மறித்த வினோத் தன் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு அவரது மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தினார்.
 
ஆனால் ரேவதி மீண்டும் மறுக்கவே! தன் கையில் இருந்த கத்தியால் ரேவதியை சரமாரியாக குத்திவிட்டு நண்பர்கடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 
 
இதில் படுகாயமடைந்து வலியால் துடித்த ரேவதி சம்வவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
 
இந்த சம்பவம் அப்பகுதியில் அப்பகுதியில் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இக்கொலையில் ஈடுபட்ட வினோத் மற்றும் அவனது நண்பர்களை போலீஸார் தேடி வருவதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்