Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியாரைக் கடித்த மருமகள் – தலையில் 6 தையலோடு மருத்துவமனையில் அனுமதி !

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (08:57 IST)
பொள்ளாச்சியில் தன் மேல் கொடுத்த புகாரை வாபஸ் வாங்காத மாமியாரை தலையில் கடித்துள்ளர் ஒரு மருமகள்.

பொள்ளாச்சி மாவட்டம் மின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி. பத்திரப்பதிவராக பணியாற்றும் இவரது மகன் சரவணக்குமார் மற்றும் மருமகள் கல்பனா. கல்பனாவும் சரவணனும் தனியாக வசித்து வரும் நிலையில் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருவதும் அதனால் கோபித்துக்கொண்டு சரவணக்குமார் தன் தாய் வீட்டுக்கு வந்து தங்குவதும் வாடிக்கையாக இருந்துள்ளார்.

இது சம்மந்தமாக மாமியார் நாகேஸ்வரிக்கும் கல்பனாவுக்கும் பிரச்சனை எழுந்துள்ளது. இது சம்மந்தமாக நடந்த தகராறு ஒன்றில் கல்பனா தன்னைத் தாக்கியதாக நாகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதை வாபஸ் வாங்குமாறு கல்பனா நாகேஸ்வரியை வற்புறுத்தியுள்ளார். நாகேஸ்வரி மறுக்க இது சம்மந்தமாக நடந்த வாக்குவாதத்தில் கோபமான கல்பனா நாகேஸ்வரியை தலையில் கடித்துள்ளார். இதில் நாகேஸ்வரியின் தலையில் ஆழமானக் காயம் ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6 தையல் போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments