Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் கண் முன்னே தாய் பலி

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (14:43 IST)
சென்னை –ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில், பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் கண் முன்னே தாய் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்துள்ள  துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா(42). இவர், உடல்  நலக்குறைவால், தன்  மகன் பார்த்திபனுடன் கே.கே. நகரிலுள்ள மருத்துவமனைக்கு இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

ஆலந்தூர் ஆசர்கானா அருகே வளைவு பகுதியில் திரும்பும்போது, கோவையிலிருந்து வந்த ஒரு அரசு விரைவுப் பேருந்து பைக் மீது மோதியது.

இதில், பார்த்திபன், அவரது தாய் ஜெயா இருவரும் பைக்கிலிருந்து கீழே விழுந்தனர். அப்போது, ஜெயா மீது மாநகர பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.

பேருந்து சக்கரத்தில் சிக்கிய ஜெயா, மகன் பார்திபன் கண் முன்னே தலை நசுங்கி பலியானார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments