பட்டியலின பெண் சமைத்த உணவை புறக்கணித்த மாணவர்கள்.. கனிமொழி எம்பி நேரில் விசாரணை..!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (10:57 IST)
பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் புறக்கணித்ததாக கூறப்பட்ட நிலையில் திமுக எம்பி கனிமொழி எம்பி நேரில் விசாரணை செய்தார்.
 
தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே பெற்றோரின் வற்புறுத்தலால் காலை உணவை பள்ளி குழந்தைகள் புறக்கணித்தனர். அதேபோல் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் புறக்கணித்ததாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் நேரில் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளிக் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுகிறார்களா? எனவும் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் பள்ளி குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து எம்.பி. கனிமொழி காலை உணவை சாப்பிட்டார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments