பொறியியல் கலந்தாய்விற்கு 1,64,054 பேர் விண்ணப்பம்: தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தகவல்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (07:40 IST)
பொறியியல் கலந்தாய்வுக்காக இதுவரை 1,64,054  பேர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பு படிக்க மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் கடந்த ஜூன் 20ஆம் தேதி பொறியியல் விண்ணப்பத்திற்கான பணி தொடங்கிய நிலையில் இதுவரை 1,64,054 பேர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது
 
மேலும் 1,14,918 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளதாகவும் அதில் 87,446  பேர் சான்றிதழை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்துள்ளனர் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது
 
பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி வாக்காளர்களை நீக்கினால் நிர்மலா சீதாராமனை பாராட்ட தயார்: ஆர்.எஸ். பாரதி..!

மோடி - அமித் ஷா - ஞானேஷ் குமார் கூட்டணியினால் கிடைத்த வெற்றி: பீகார் குறித்து செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தியின் ‘வாக்குத்திருட்டு’ குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை: காங்கிரஸ் பிரமுகர் திடீர் விலகல்..!

உலக வங்கி நிதியை திசை திருப்பி பெற்ற வெற்றி. NDA குறித்து ஜன் சுராஜ் குற்றச்சாட்டு

பீகார் முதலமைச்சர் யார்? அமித்ஷாவுடன் ஜெபி நட்டா தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments