Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 24 மணி நேரத்தில் விலகும் வடகிழக்கு பருவமழை!!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (13:42 IST)
வடகிழக்கு பருவமழை இன்னும் 24 மணி நேரத்தில் விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல். 

 
தமிழகத்தில் கடந்த சில மாதம் முதலாக வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வந்தது. மேலும் வங்க கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிந்தது.
 
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இன்னும் 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பை விட 59% அதிக மழை பதிவாகியுள்ளது. 22 மாவட்டங்களில் மிக அதிக மழையும், 14 மாவட்டங்களில் அதிக மழையும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments