தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

Prasanth Karthick
சனி, 24 மே 2025 (12:07 IST)

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த நிலையில் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் கேரளா, தமிழக பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கணிக்கப்பட்ட நாளுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் இன்று தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இனி கேரளா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், மும்பை உள்ளிட்ட அரபிக் கடலோர பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும்.

 

வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றாலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments