Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண உதவி செய்தவர்களுக்கு ஜூன் 4க்கு பின் சிக்கலா? மிரட்டப்படும் தொழிலதிபர்கள்?

Mahendran
சனி, 20 ஏப்ரல் 2024 (09:54 IST)
நாடாளுமன்ற தேர்தலின் போது பறக்கும் படையினர் என்னதான் விழிப்புணர்வுடன் இருந்தாலும் கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடா அமோகமாக நடைபெற்றது என்றும் கடைசி நேரத்தில் ஆளும் கட்சிக்கு பல தொழில் அதிபர்கள் பணத்தை வாரி இறைத்ததாக  கூறப்படுகிறது. 
 
இந்த செய்தியை கேள்விப்பட்ட கமலாலய தரப்பு ஆளுங்கட்சிக்கு யார் யார் பணம் கொடுத்தார்கள் என்ற லிஸ்ட் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு அவர்களுக்கு குடைச்சல் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் ஆளும் தரப்பு இதற்கெல்லாம் அசர போவதில்லை என்றும் இந்த தேர்தலில் பாஜகவுக்கு பணம் கொடுத்த தொழிலதிபர்கள் யார் யார் என்ற லிஸ்ட்டை எடுத்து வருவதாகவும் தங்களுக்கு குடைச்சல் கொடுத்தால் பதில் குடைச்சல் கொடுக்க ஆளும் தரப்பும் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
மொத்தத்தில் தேர்தல் முடிந்தாலும் இரண்டு கட்சிகளுக்கு இடையே உள்ள போட்டி மட்டும் முடியவில்லை என்று கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments