Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கிரவாண்டியில் சிக்கியப் பணம் – ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் !

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (14:46 IST)
விக்கிரவாண்டியில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் 17.8 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகியத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை  5 மணியளவில் விக்கிரவாண்டி அருகே உள்ள கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே நடந்த சோதனையில் கார் ஒன்றில் இருந்து  ரூ.17. 80 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. காரில் இருந்தவர் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக நகை வாங்கப் பணம் எடுத்துச் சென்றதாக சொன்னாலும் அவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் 5.6 கிலோ மதிப்புடைய 25 மற்றும் 10 கிராம் எடை கொண்ட வெள்ளிக்காசுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments