Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி பேச்சை நேரலை செய்யாத தூர்தர்ஷன் அதிகாரி சஸ்பெண்ட்!

Webdunia
புதன், 2 அக்டோபர் 2019 (12:28 IST)
பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை தூர்தர்ஷனில் நேரலை செய்யாத காரணத்தால் சென்னை தூர்தர்ஷன் அதிகாரி வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில், சென்னை ஐஐடி விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் “ஹேக்கத்தான்” தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதோடு மாணவர்களுடன் உரையாடினார். 
 
இந்த பட்டமளிப்பு விழாவை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குனர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
 
வசுமதியை பணியிடை நீக்கம் செய்து பிரசாத் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சசி ஷேகர் நடவடிக்கை எடுத்துள்ளார். பிரதமரின் நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பு செய்யாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments