10 நிமிடம் பிரதமரிடம் தனியே பேசிய முதல்வர்: என்ன பேசினார்கள்?

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (15:10 IST)
10 நிமிடம் பிரதமரிடம் தனியே பேசிய முதல்வர்: என்ன பேசினார்கள்?
பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை தந்தபோது சுமார் எட்டாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் சற்றுமுன் தமிழகத்தில் இருந்து கிளம்பி கேரளா சென்றுள்ளார் 
 
இந்த நிலையில் தமிழக சுற்றுப்பயணத்தின்போது அரசு விழா முடிந்தவுடன் பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடமும் பத்து நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினார் 
 
இந்த ஆலோசனையில் தேர்தல் கூட்டணி குறித்து மூவரும் பேசியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இன்னும் பாஜக தவிர வேறு எந்தக் கட்சிகளும் உறுதிசெய்யப்படவில்லை.
 
பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதா? அல்லது அதிமுக பாஜக மட்டும் தனித்து கூட்டணியாக போட்டியிடுவதா என்பது குறித்த ஆலோசனையில் மூவரும் பேசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது
 
மேலும் மத்திய அரசின் ஒரு சில திட்டங்களை தமிழக மக்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும், அந்தத் திட்டங்களை இப்போதைக்கு ஒத்தி வைக்கவும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பிரதமரிடம் வேண்டுகோள் கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments