Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விலையைக் குறைப்பதற்கான மோடி பிரதமராகவில்லை- அமைச்சர் பாட்டில்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (19:20 IST)
தக்காளி விலையைக் குறைப்பதற்கான மோடி பிரதமராகவில்லை என மத்திய இணை அமைச்சர் பாட்டில் தெரிவித்துள்ளார்.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள், புதிய திட்டங்கள், கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றிற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பாஜக அரசின் இந்த பட்ஜெட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஜீரோ பட்ஜெட் என விமர்சித்திருந்தார். அதேபோல் எதிர்கட்சிகள் இந்த பட்ஜெட்டை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  மத்திய  இணை அமைச்சர் பாட்டில், மட்டன் ஒரு கிலோ ரூ.700க்கும், பீட்சா ரூ.500க்கும் விற்பனை ஆகிறது. வெங்காயமும், தக்காளியும் ரூ.40 க்கு உயந்துவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வெங்காயம் மற்றும் தக்காளியின் விலையைக் குறைக்க அவர் பிரதமர் ஆகவில்லை என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments