Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேச தடை?

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (13:01 IST)
சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு தடை விதிக்க போக்குவரத்துக்கழகம் பரிந்துரை. 

 
தமிழக அரசின் போக்குவரத்துக்கழக பேருந்துகள் மாநிலத்தின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் பலர் செல்போன்களில் சத்தமாக பேசுவதும், சத்தமாக பாடல்கள் வைத்து கேட்பதும் சக பயணிகளுக்கு பொதுவாகவே இடையூறு ஏற்படுத்தும்.
 
இந்நிலையில் சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு தடை விதிக்க போக்குவரத்துக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த கடிதத்தை தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அனுப்பியுள்ளது. பேருந்துகளில் பாடல் கேட்பது, வீடியோ கேம் விளையாட தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
முன்னதாக கேரள போக்குவரத்து கழகம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி பேருந்துகளில் சத்தமாக பேசுவது, பாடல் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்.. 13வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலி? கொலையா? விபத்தா?

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments