Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேன் கூட்டில் கல்லெறிய கூடாது – ஸ்டாலின் எச்சரிக்கை

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (18:23 IST)
தமிழ்நாட்டில் மும்மொழி கல்வி கொள்கையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் “மும்மொழி கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் கொண்டு வந்தால் பேரிடரை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் “பதவியேற்ற உடனே தமிழகத்துக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. தற்போது மும்மொழி கல்வி கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சியை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இருமொழி கொள்கை என்ற தேன் கூட்டிலே கல்லெறிய வேண்டாம். மும்மொழி கொள்கை தமிழ்நாட்டில் வந்தால் பேரிடரை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். இதை கண்டும் காணாமல் இருக்கும் எடப்பாடி அரசு உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் தங்கள் கட்சியின் பெயரில் உள்ள அண்ணா என்ற பெயரையும், திராவிட என்ற பெயரையும் நீக்கிவிட வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments