Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்டாவுக்கு அனுமதி வழங்கியதே ஆ.ராசா தான்: இப்போ தடை கேட்கிறார் ஸ்டாலின்!

பீட்டாவுக்கு அனுமதி வழங்கியதே ஆ.ராசா தான்: இப்போ தடை கேட்கிறார் ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (18:42 IST)
ஜல்லிக்கட்டு நடைபெறக்கூடாது, அதில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாடி தடை பெற்றுள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.


 
 
இந்நிலையில் இந்த வருடம் கொதித்தெழுந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் காளைகளை அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டை தடையை மீறி நடத்தினர்.
 
கடந்த சில தினங்களாக பீட்டா அமைப்பை பற்றி பலரும் விமர்சித்து வருகின்றன. அந்த அமைப்பு வெளிநாட்டு கைகூலி எனவும் இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னர் மிகப்பெரிய சதி உள்ளது என விமர்சனங்கள் வருகின்றன.

 
திமுக போன்ற கட்சிகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தின. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

 
ஆனால் பீட்டா அமைப்புக்கு இந்தியாவில் அனுமதி வழங்க உள்துறை அமைச்சகத்துக்கு சிபாரிசு செய்ததே திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments