Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் பூர்வீக வீட்டில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (07:41 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு இன்று முதல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். இன்று தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த ஊரான திருவாரூரில் இருந்து சற்றுமுன் பிரச்சாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.
 
மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேர்தல் பிரச்சாரத்தை மு.க.ஸ்டாலின் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது பூர்வீக வீட்டில் இருந்து தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர்.
 
இன்று மதியம் வரை திருவாரூர் சட்டமன்ற திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் மு.க. ஸ்டாலின் மாலை மற்றும் இரவில் தஞ்சை பாராளுமன்ற திமுக வேட்பாளருக்கு ஓட்டு சேகரிக்கவுள்ளர். நாளை அவர் பெரம்பலூரில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments