Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புநிதி! – முதல்வர் தொடங்கி வைத்தார்!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (12:00 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான வைப்புநிதி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா பரவல் நீடித்து வரும் நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல குழந்தைகளும் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கியில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி வைக்கப்படும் என்றும், அவர்களுக்கான கல்வி செலவை அரசு ஏற்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வைக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் தாய், தந்தை இருவரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உடனடி நிவாரணம் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

உலக சாதனைக்காக சிகரம் குழுவினர் நடத்திய ஒயிலாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments