Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்காமல் தண்ணி காட்டிய சிவசங்கர் பாபா! – டெல்லியில் வளைத்து பிடித்த போலீஸ்!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (11:51 IST)
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம் பகுதியில் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிவசங்கர் பாபா சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் அவரிடம் விசாரணை செய்யவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் டேராடூன் விரைந்தனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பி தலைமறைவானதால் பரபரப்பு எழுந்தது.

அதை தொடர்ந்து போலீஸார் சிவசங்கர் பாபாவை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் டெல்லி காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி போலீஸார் தற்போது கைது செய்து சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்