Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்கள் முதல்வனாக வரவேண்டும்! – “நான் முதல்வன்” திட்டம் தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (10:48 IST)
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று “நான் முதல்வன்” என்ற மாணவர்களுக்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திமுக தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இன்று தனது பிறந்தநாளில் காலையிலேயே மெரினா கடற்கரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் வைத்து மரியாதை செய்தார்.

பின்னர் ”நான் முதல்வன்” என்னும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “எனது பிறந்தநாளில் எனது கனவு திட்டமான “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இளைஞர்கள் கல்லூரி பட்டத்தை தாண்டிய தனித்திறமை கொண்டிருந்தால்தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும். இளைஞர்கள் அனைவரும் அனைத்து விதமான தகுதியும், திறமையும் பெற்று அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி.. நாசா அறிவிப்பு..!

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. என்ன ஆச்சு?

ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments