Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழடியை பார்த்தபோது சந்திரயானை போல் பறந்தேன்.. மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Arun Prasath
சனி, 28 செப்டம்பர் 2019 (18:18 IST)
கீழடியில் நின்றிருந்தபோது எனது மனம் சந்திரயான் விண்கலம் போல பறந்தது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் பண்டைய பொருட்களான மண் பானை, முதுமக்கள் தாழி ஆகிய பொருட்கள் கண்டறியப்பட்டன. இது சங்ககால நாகரீகத்துக்கான சான்றாக கருதப்படுகிறது. சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு, ஹராப்பா மொகஞ்சாதாரோவின் தொடர்ச்சியாக கீழடி நாகரீகம் இருந்துள்ளது என்பதையும் உறுதிபடுத்தியது இந்த அகழாய்வு.

இந்நிலையில் கீழடி பகுதியை சென்று பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், தான் கீழடியில் நின்றபோது மனம் சந்திரயான் போல உயரே பறந்தது என கூறியுள்ளார். மேலும் திராவிட தமிழர்கள், பண்டைய நாகரீகத்தில் சிறந்து விளங்கியுள்ளனர் எனவும், இது போன்ற பண்பாட்டு பெருமைகளை பாதுகாப்பது நமது கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments