Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (12:48 IST)
தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் நெடுஞ்சாலை பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தொழில் முன்னேற்றத்திற்கு சாலைகள் இன்றியமையாதவை என்பதால் தரமான சாலைகளை அமைப்பதில் முக்கியத்துவம் அளிப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “தொழில்மயமான தமிழ்நாட்டிற்கு சாலைகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துள்ளோம். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்களை விரைவுபடுத்த தேவையான முழு ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்கும்” என தெரிவித்துள்ளார். அதேசமயம் எட்டுவழி சாலை போன்ற மக்கள் எதிர்ப்பை சந்தித்துள்ள திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments