Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கம்போல திரைமறைவு பேரங்கள் நடந்திருக்கு! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (14:26 IST)
புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சி கலைக்கப்பட்டதற்கு பின்னால் சதி நடந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களும் திமுகவின் 1 எம்.எல்.ஏவும் ராஜினாமா செய்த நிலையில் பெரும்பான்மை இழந்த நாராயணசாமி ஆட்சி கலைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்சி கலைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “திரைமறைவு பேரங்கள் - ஜனநாயகப் படுகொலையை இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது - அதிகார துஷ்பிரயோகம் இது! ஜனநாயகம் காப்பதில் முதலமைச்சர் நாராயணசாமியின் துணிச்சலை வாழ்த்துகிறேன். திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்!” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments