Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிப்பு? – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
புதன், 26 மே 2021 (11:06 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மருந்து, மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்கு குறித்து பேசியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ”தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பரவல் குறைந்திருக்கிறது. திமுக ஆட்சியமைத்ததிலிருந்து தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துதல் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதி தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது. தேவைப்பட்டால் முழு ஊரடங்கை நீட்டிக்க சட்டமன்ற குழு ஆலோசனை அளித்துள்ளது. தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments