Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போன் செய்தால் வீட்டிற்கே வரும் காய்கறி வண்டி – விற்பனையாளர் விவரங்கள் ஆன்லைனில்!

போன் செய்தால் வீட்டிற்கே வரும் காய்கறி வண்டி – விற்பனையாளர் விவரங்கள் ஆன்லைனில்!
, புதன், 26 மே 2021 (10:20 IST)
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் காய்கறி விற்பவர்கள் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தினசரி தேவையான காய்கறி, பழங்களை மக்கள் வாழும் பகுதிகளிலேயே சென்று விற்பனை செய்ய காய்கறி வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் ஏரியா வாரியாக மூன்று சக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்வோர் தொடர்பு எண், பெயர் உள்ளிட்ட விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் தங்கள் அருகில் உள்ள காய்கறி விற்பனையாளரை எளிதில் அணுகி பொருட்களை வாங்க உதவும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் 2 லட்சத்தை தாண்டிய தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!