Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (11:34 IST)
நாளை உலக குழந்தை தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் பிரச்சினை இன்னமும் தொடர்ந்து வருகிறது. முன்னதாக போர்கள் காரணமாக கைவிடப்பட்ட குழந்தைகள் உலகளவில் அதிகளவில் குழந்தை தொழிலாளர்களாக ஆக்கப்பட்டார்கள். தற்போது இந்த நிலை அகதிகளாக மாறும் மக்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டு வருகிறது.

உலக அளவில் பார்க்காமல் உள்ளூர் அளவிலும் பார்த்தால் கூட பல்வேறு பகுதிகளில் குடும்ப வறுமை, பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், அனைவருக்கும் கல்வி கிடைக்கவும் பல நாடுகளும் முயன்று வருகின்றன. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் குழந்தை தொழிலாளர் குறித்து பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “புன்னகை பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளை கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை அரசு அனுமதிக்காது. குழந்தைகளை கொண்டாடுவோம். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம். பெற்றோர் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments