ஜோசிடர் பேச்சால் மகனை கொன்ற தந்தை! – மு.க.ஸ்டாலின் வேதனை

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (12:23 IST)
திருவாரூர் அருகே ஜோதிடத்தை நம்பி தந்தையே மகனை கொன்ற சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அருகே உள்ள நன்னிலத்தில் எதிர்காலத்தில் மகனால் ஆபத்து வரலாம் என ஜோசியர் சொன்னதை நம்பி 5 வயது மகனை தந்தையே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து வேதனை தெரிவித்து பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின் “மகனால் ஆபத்து நேரலாம் என ஜோதிடர் கூறியதால், நன்னிலத்தில் தனது 5 வயது மகனை தந்தையே எரித்துக் கொன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது! காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, இனி நரபலிகளுக்கு இடம் தரக் கூடாது! மெய்ப்பொருள் காண்பது அறிவு - என்ற வள்ளுவரின் வரிகளை என்றும் மனதில் கொள்வோம்!” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments