Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரோட்டாவில் கை வைத்த இளைஞர்! கொலையில் முடிந்த சண்டை! – கோவையில் பரபரப்பு!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (12:07 IST)
கோவையில் பரோட்டாவை எடுத்து சாப்பிட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிபவர் 52 வயதான வெள்ளையங்கிரி. அதே சூளையில் ஜெயக்குமார் என்ற இளைஞரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய ஜெயக்குமார் செங்கல்சூளைக்கு வந்துள்ளார். அங்கே வெள்ளையங்கிரி பரோட்டா வாங்கி வந்து சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார்.

அவரிடம் சென்ற ஜெயக்குமார் அவரது அனுமதி பெறாமலே அவரது பரோட்டாவை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரத்தில் அருகில் இருந்த ஒரு கட்டையால் ஜெயக்குமாரை தலையில் தாக்கியுள்ளார் வெள்ளையங்கிரி. இதனால் அடிபட்ட ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வெள்ளையங்கிரியை கைது செய்துள்ளனர், பரோட்டாவால் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments