Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டாலும் பாஸ்; ஸ்டாலின் கோரிக்கை!

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (14:17 IST)
தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் விலக்களிக்க வேண்டும் என கோரியுள்ளார் ஸ்டாலின். 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் இயங்காத நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது. ஆனால் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்குமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. 
 
இந்நிலையில் மறுதேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதாவது இறுதி ஆண்டு பாடங்களின் மறுதேர்வை தவிர மற்ற செமஸ்டர் பாடங்களில் மறுதேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படுவதாக உத்தரவிட்டார். 
 
ஆனால், தற்போது திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் விலக்களிக்க வேண்டும் என கோரியுள்ளார். அவர் கூறியதாவது, கட்டணம் செலுத்தாக மாணவர்களுக்கும் பருவத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்க வேண்டும். 
 
பேரிடர் நெருக்கடியில் தேர்வு கட்டணம் செலுத்த இயலாமல் போன மாணவர்களை முதலவர் கைகழுவி விட்டாரா என்ன என கேள்வியும் எழுப்பியுள்ளார் ஸ்டாலின். 

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments