Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் தேர்தல் முறைகேடு புகார்கள்: அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின்

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (12:38 IST)
மகாகத்பந்தன் கூட்டணி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைக்கேடு புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது என பீகார் தேர்தல் குறித்து ஸ்டாலின் அறிக்கை. 
 
சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்று பின் தங்கியுள்ள நிலையில் பாஜக கூட்டணி 125 இடங்களை பிடித்து பெரும்பான்மையை தாண்டியுள்ளது. இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 
 
பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் முதலர் நிதீஷ்குமாருக்கு வாழ்த்துக்கள். பீகாரின் இளம் தலைவராக உருவெடுத்து மக்களின் ஆதரவோடு உயர்ந்துவரும் தேஜஸ்வி யாதவ் தலைமையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது அந்த மாநிலத்தின் ஜனநாயகத்திற்கு நல்ல உயிரோட்டத்தையும், துடிப்பான ஊக்கத்தையும் அளித்திடக்கூடியது. 
 
கொரோனா காலத்தில் பீகார் சட்டமன்ற தேர்தலையும், பல மாநிலங்களில் இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்தி இருப்பது இந்திய ஜனநாயகத்தின் வலிவையும், பொலிவையும் காட்டுகிறது. ஆனால், மகாகத்பந்தன் கூட்டணி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைக்கேடு புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது. 
 
தேர்தல்கள் எந்தவித தலையீடுமின்றி, நியாயமாக, நடுநிலையுடன், சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments