Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் தொங்கு பால விபத்து; 140 பேர் பலி! – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (09:23 IST)
குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் பிரம்மாண்டமான தொங்கு பாலம் ஒன்று மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்த பாலம் புணரமைக்கப்பட்டு மறுதிறப்பு செய்யப்பட்டிருந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான மக்கள் பாலத்தில் நின்றுள்ளனர்.

அப்போது மக்களின் எடைய தாள முடியாமல் தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. இதில் மக்கள் பலர் ஆற்றில் விழுந்தனர். பாலர் பாலத்தின் மீதங்களை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்த பால விபத்தில் பலி எண்ணிக்கை 140ஐ கடந்துள்ளது. 117 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.




இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியான சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விரும்புகிறேன். அதேசமயம் விபத்தில் சிக்கி மாயமானவர்கள் விரைந்து மீட்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments