Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வருமையில் வாடிய தியாகராஜர் பாகவதர் பேரனுக்கு ரூ.5.லட்சம்!

வருமையில் வாடிய தியாகராஜர் பாகவதர் பேரனுக்கு ரூ.5.லட்சம்!
, வியாழன், 1 ஜூலை 2021 (09:30 IST)
எம்.கே.தியாகராஜர் பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் உதவி செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

 
தியாகராஜர் பாகவதரின் பேரன் சாய்ராம் நேற்று முன்தினம் தலைமை செயலகம் வந்திருந்தார். அவர் முதல்வரை தனி பிரிவில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில், எங்களது குடும்பம் வறுமையில் சிக்கி தவிப்பதாகவும், வாடகை கொடுக்க கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 
 
இதனைத்தொடர்ந்து இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதை அறிந்ததும் உடனடியாக அந்த மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
 
அதன்படி, எம்.கே.தியாகராஜர் பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒன்றினை ஒதுக்கித் தரவும் மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவியையும் வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா 10 பேரிடம் பேசினாலும், 10,000 பேரிடம் பேசினாலும் கவலையில்லை - ஈபிஎஸ்!