Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழா! – தேசிய தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:29 IST)
முதல்வர் மு.க.ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் புத்தகக் கண்காட்சியை நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை “உங்களில் ஒருவன்” என்ற சுயசரிதை புத்தகமாக வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.

முதல் பாகமாக வெளியாகும் “உங்களில் ஒருவன்” புத்தகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறப்பு, வாழ்க்கை, அரசியல் பயணம் என மிசா காலத்தில் சிறைவாசம் சென்றது வரை இடம்பெற உள்ளதாக கூறியுள்ளார். இந்த முதல் பாகத்தை சென்னையில் விழா நடத்தி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சரத் பவார், பரூக் அப்துல்லா உள்ளிட்ட தேசிய, மாநில தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments