Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ. 26.95 கோடி செலவில் 2 திட்ட பணிகள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

J.Durai
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (14:42 IST)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமை செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில்  ரூ.769.97 கோடி செலவிலான 103 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, ரூ.1192.45 கோடி மதிப்பீட்டிலான 30 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
 
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ. 10.73 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள நகர மாநாட்டு மைய கட்டடத்தையும், ரூ. 16.22 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள வணிக வளாக கட்டடத்தையும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன்  முடிவுற்ற திட்ட பணிகளான நகர மாநாட்டு மைய கட்டடத்தையும், வணிக வளாக கட்டடத்தையும் அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
          
இந்நிகழ்ச்சியில்,  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

பயங்கரவாதி தொடர்ந்த வழக்கில் தேவையற்ற நடவடிக்கை.! அமெரிக்காவுக்கு இந்தியா எதிர்ப்பு..!!

எங்கள் நாட்டு எண்ணமும் காங்கிரஸ் எண்ணமும் ஒன்று தான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments