தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (10:38 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் போராட்டம் நடந்த நிலையில் அந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அந்த விசாரணை கமிஷனின் இடைக்கால அறிக்கை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 3 பேரின் குடும்பத்துக்கு பணிநியமனம் செய்யப்படும் என ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது அவரே முதல்வராக ஆகியுள்ள நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார் 
 
மேலும் தீவிர காயமடைந்த 3 பேருக்கும் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பணி நியமனம் பெற்ற அனைவரும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!

தவெகவில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்.. அவருடன் இணைவது யார் யார்?

60 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பணியில் இருந்த சிறப்பு காவல் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments